இலங்கை பொது நிதி கணக்கியல் சங்கத்தினால் சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் திணைக்களங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட போட்டியில் 2022 ஆம் ஆண்டிற்காக முசலி பிரதேச சபை தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
பண்டாரநாயக்கா ஞாபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 04.12.2023 அன்று நடைபெற்ற “சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2023” நிகழ்வில் முசலி பிரேதேச சபைக்கு சிறப்பு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் பல்வேறு திணைக்களங்களில் நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
