போதை வஸ்து பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு

பாடசாலை மாணவர்களிடையே போதை வஸ்து பாவனையை கட்டுப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வை முசலி பிரதேச சபை மன்/ சிலாவத்துறை அ.மு.க பாடசாலயில் 13.11.2023 திங்கட்கிழமை நடத்தியது.
முசலி பிரதேச சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கே.எம்.சியாத் நெறிப்படுத்தியதுடன் சிலாவத்துறை பாடசாலை அதிபர் ஏ.ரி. றைஸ்தீன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் விஷேட உளவள ஆலோசகர் எப்.எம். அஸ்ஹர் மற்றும் பிரதான பொது சுகாதார பரிசோதகர் றூபன் சில்வா அவர்களும் வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *